top of page
banner.jpg

மாநகரத்தின் மரபும், வீரமிகு வரலாறும்!

மாமதுரையர்

மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனீ, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது இவற்றை பூர்வீகமாக கொண்டவர்களை உறுப்பினர்களாக்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு, ஜாதி, மதம், அரசியல் மற்றும் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு லாபநோக்கமின்றி மாமதுரையர் அமைப்பு செயல்படும்.

உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.

மாமதுரையர் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்

மதுரையின் மாவீரர்களை நினைவுகூரும் நெஞ்சங்கள்!

  1. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனீ, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளில் வசிப்பவர்கள் அல்லது இவற்றை பூர்வீகமாக கொண்டவர்களை உறுப்பினர்களாக்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

  2. தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு, ஜாதி, மதம், அரசியல் மற்றும் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு லாபநோக்கமின்றி மாமதுரையர் அமைப்பு செயல்படும்.

  3. சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.

  4. உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.

  5. போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையாக ஜொலிக்க வைக்க முயற்சிக்கப்படும்.

  6. பல்வேறு பகுதிகளில் பாரம்பரியம், பெருமை மற்றும் வரலாற்றை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற முயற்சிக்கப்படும்.

  7. தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவது ஊக்குவிக்கப்படும்.

  8. முக்கிய தலங்களின் அருமை பெருமைகளை வீடியோக்களாக, சேனல்கள் மூலம், உலகமுழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கப்படும்.

  9. பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.

  10. முடங்கும் நிலையில் உள்ள பாரம்பரிய தொழில் வணிகங்களை புனரமைக்க அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் மீட்டெடுக்க முயற்சிக்கப்படும்.

  11. தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்களை உருவாக்க முயற்சிக்கப்படும்.

சீரான நிர்வாகம், சிறந்த எதிர்காலம்!

நிர்வாகம், நிதி & செயல் திட்டம்

  1. மாமதுரையர் அமைப்பில் (1) வழிகாட்டு குழு - GBM (2) ஆலோசனைக்குழு - ABM (3) செயற்குழு - ECM (4) பொதுக்குழு - MEMBERS என நான்கு குழுக்கள் செயல்படும்.

  2. பகுதி வாரியாகவும், கமிட்டி வாரியாகவும், செயற்குழுவில் இருந்து செயலாளர்கள் மற்றும் இணை செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  3. உறுப்பினர் எண்ணிக்கை இலக்கை அடைய மாவட்ட வாரியாக செயலாளர்களையும் அவர்களின் கீழ் இணைச் செயலாளர்கள் அந்த மாவட்டத்தில் பகுதிவாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை இலக்கு எண்ணிக்கைகள் பிரித்து வழங்கப்படும்.

  4. அலுவலக ஊழியர் ஊதியம், அலுவலகம் மற்றும் அடிப்படை நிர்வாக செலவுகளுக்கு மாதம் தோறும் கார்பஸ் ஃபண்ட் டெபாசிட் மீதான வட்டி வருவாய் பயன்படுத்தப்படும்.

white madurai bg.png

மாற்றத்தை உருவாக்க உங்கள் உறுப்பினர் ஆதரவு தேவை!

உறுப்பினர் பயன்கள் & சந்தா

1) மாமதுரையர் உறுப்பினர் சந்தா காலண்டர் ஆண்டாக இருக்கும் (ஜனவரி முதல் டிசம்பர் வரை)


2) உறுப்பினர் என்பது குடும்ப உறுப்பினர்கள் (4 வரை ) அடங்கும். தகுந்த கூட்டங்களில் குடும்ப உறுப்பினர் எவரேனும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


3) மாமதுரையர் உறுப்பினர்கள் பங்குபெறும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் விழாவுடன் இணைந்த ஆண்டுவிழா, மார்ச் மாதத்தில் மகளிர் தின விழா, மே மாதத்தில் சித்திரை விழா போன்றவை நடத்தப்படும்.


4) மாமதுரையர் உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டை மூலம் 5% முதல் 50% வரை தள்ளுபடியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை மாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறலாம்.


5) டெட்கோ அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும் "இல்லம் தோறும் தொழில்" திட்டத்தில் பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


6) அரசாங்கத்தின் பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் சலுகைகள் சம்பந்தமாக நடத்தப்படும் விழிப்புணர்வு கூட்டங்களில் மாமதுரையர் உறுப்பினர் குடும்பத்தில் ஏதுவானவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


7) உறுப்பினர் வருட சந்தா ரூ. 500/-

படங்கள் சொல்லும் கதைகள்!

நாங்கள் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் இங்கே!

ABOUT MAAMADURAIYAR

Maamaduraiyar refers to the proud people of Maamadurai (Madurai), a city known for its ancient heritage, culture, and spiritual significance. Deeply rooted in Tamil tradition, Maamaduraiyar symbolize the valor, wisdom, and artistic richness of the region. Madurai, once the seat of the mighty Pandya kingdom, was a hub for Tamil Sangam literature and classical arts. 

GET IN TOUCH

10th East, Manikkavasagar St, Anna Nagar, Madurai, Tamil Nadu 625020

EVENT GALLERY

bottom of page